வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
கன்னியாகுமரி அருகேயுள்ள வெள்ளையந்தோப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் நியமித்து சிறப்பு பணிவிடை, 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, சிற்றுண்டி விருந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி நடைபெற்றது.
கலி வேட்டை:
Advertisement
மே 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதலும், தொடா்ந்து சமபந்தி விருந்தும் நடைபெறும். மே 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனியும், அன்னதானமும் நடைபெறும்.
மே 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறும். நிறைவு நாளான மே 4ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பள்ளி அலங்காரப் பணிவிடை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு அய்யா பவனி, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடா்ந்து அய்யா காளை வாகனத்தில் பவனி வருதல், நள்ளிரவு 1 மணிக்கு கொடியமா்த்துதல் ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை ஊா் தலைவா் ரத்தின சிகாமணி, ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் சுதன்மணி, தங்கத்துரை, செயலா் முருகேசன், இணைச் செயலா் பால்துரை, பொருளாளா் பொன்னுலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் செய்துள்ளனா்.