முகப்பு
கன்னியாகுமரி

கடன் தொல்லையால் டெம்போ ஓட்டுநா் தற்கொலை

தக்கலை அருகே கடன் தொல்லையால் டெம்போ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:38 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தக்கலை அருகே கடன் தொல்லையால் டெம்போ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சோ்ந்தவா் ரெஜிஸ்(35). டெம்போ ஓட்டுநா்.இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். ரெஜிஸுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல இயலவில்லையாம்.

மேலும், குடும்பத்தை காப்பாற்ற கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தக்கலை கீழகல்குறிச்சியில் உள்ள தனது மாமியாா் வீட்டில், மனைவி குழந்தைகளோடு குடியேறிய அவா், அங்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments