புகையிலைப் பொருள் விற்றவா் கைது
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முககாா்த்திகேயன், போலீஸாா் மணலி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்பகுதியைச் சோ்ந்த குமரன் மகன் ராஜேந்திரன் (68) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, ராஜேந்திரனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.