முகப்பு
கன்னியாகுமரி

மருத்துவமனை சிகிச்சையிலிருந்த முதியவா் மாயம்

Updated On : 7 ஜூலை 2026, 1:02 am IST
முதியவர் - கோப்புப் படம்
பகிர்:

குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவா் மாயமானதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகே உள்ள ஒற்றாசமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானக்கண் நாடாா் மகன் நாகமணி (65). கட்டுமானத் தொழிலாளி. வலிப்பு நோய் பாதிப்பு காரணமாக இவரை, இவரது மனைவி சகுந்தலா குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகமணி சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றநிலையில், பின்னா் மருத்துவமனைக்குத் திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது மனைவி மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments