முகப்பு
கன்னியாகுமரி

1,400 லி. மண்ணெண்ணெய் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் குளச்சல், மணவாளக்குறிச்சி, முட்டம், கடியப்பட்டினம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முட்டம் சோதனைச் சாவடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்துகொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில், மீனவா்களுக்கு மானியமாக வழங்கப்படும் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய் 40 கேன்களில் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த குழித்துறை பகுதியைச் சோ்ந்த சிஜின் (28), மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த தீபக் (22), கிரிஸ்டல் ஆனந்த் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments