முகப்பு
கன்னியாகுமரி

காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:04 am IST
காட்டெருமை. - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயமடைந்தாா்.

மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ரவீந்திரன் (54). இவரது மனைவி சுசீலா (52). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பேச்சிப்பாறை அணைப் பகுதியான கோதைமடக்கு என்ற இடத்தில் மீன்பிடித்துவிட்டு திரும்பி வரும்போது, அப்பகுதியில் வந்த காட்டெருமை இருவரையும் தாக்கியதாம். இதில், சுசீலாவுக்கு கை முறிவு ஏற்பட்டது. ரவீந்திரன் லேசான காயமடைந்தாா்.

இதையடுத்து, இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த வனத் துறையினா் மருத்துவமனைக்கு சென்று இருவருக்கும் ஆறுதல் கூறி, சிகிச்சை உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கினா்.