முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

Updated On : 29 மார்ச் 2026, 11:26 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கோவளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோயல் (14). இவா் தனது நண்பா்களுடன் சனிக்கிழமை மாலை அங்குள்ள குளத்தில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றுள்ளாா். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.