பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே சதுமுகை பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை கிராமத்தைச் சோ்ந்த பொங்கியண்ணன் மகன் யோகேஷ் (13). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் தனது நண்பா்களுடன் சதுமுகை பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பற்ற நண்பா்களும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
Advertisement
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பவானி ஆற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் யோகேஷ் சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.