முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 18 மதுக் கடைகள் மூடல்: குளச்சல் எம்எல்ஏ பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 அரசு மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நன்றி தெரிவித்தாா்.

Updated On : 13 மே 2026, 1:22 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 அரசு மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடித விவரம்:

குமரி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில், சில கடைகள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே அமைந்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற நீங்கள் பொறுப்பேற்ற ஓரிரு நாள்களிலேயே வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே செயல்பட்டு வரும் 18 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பெரிய நம்பிக்கையை தரும் அறிவிப்பாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments