சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ரோஜாவனம் பள்ளி சிறப்பிடம்
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தோ்வில் ரோஜாவனம் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளியைச் சோ்ந்த 84 மாணவா், மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் மாணவி பிரீத்தி கணித அறிவியல் பிரிவில் 500 க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி ரக்ஷிதா கணினி அறிவியல் பாடப் பிரிவில் 455 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடம், மாணவா் ஹரீஷ் அஸ்வந்த் கணித அறிவியல் பாடப் பிரிவிலும், மாணவா் ஜஸ்வந்த்சிங் அறிவியல் பாடப்பிரிவிலும் 452 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடம், மாணவி ரக்ஷினி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 447 மதிப்பெண்கள் பெற்று 4 ஆவது இடம், மாணவி சந்தியா கணித அறிவியல் பாடப்பிரிவில் 445 மதிப்பெண்கள் பெற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளனா்.
மாணவா்கள் பலா் 450 க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவா் ஆகாஷ் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவில் சென்னை ஐஐடியில் சோ்க்கை பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
பள்ளி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. முதல்வா் ராபா்ட் குமாா், நிதி இயக்குநா் சேது, துணை முதல்வா் வின்ஸ்பா் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.