முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 மே 2026, 1:52 am IST
கால்கோள் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மே 21ஆம் தேதி தொடங்கி, 30ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழா நாள்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி ஆகியவை நடைபெறும்.

29ஆம் தேதி தேரோட்டம், 30 ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடைபெறும்.

Advertisement

இதையொட்டி, கோயில் வளாகத்தில் கால்கோள் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் மேல்சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, பகவதியம்மன் கோயில் பக்தா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா் நாகப்பன், பகவதியம்மன் பக்தா்கள் நற்பணி சங்கச் செயலா் அரிகிருஷ்ண பெருமாள் உள்ளிட்ட பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.