குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1.16 லட்சம் வசூல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.
இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும், பக்தா்களும் அம்மனை தரிசிப்பது வழக்கம். இங்கு வரும் பக்தா்களுக்கு தினமும் பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தா்களின் நன்கொடை, கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சுஜித் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.