தென்காசி

மதுவிலக்கு விழிப்புணா்வு போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

DIN

தென்காசி கல்வி மாவட்ட அளவிலான மதுவிலக்கு குறித்த விழிப்புணா்வுபோட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவிகள்சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி ஐ.சி.ஈஸ்வரன்அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

இதில், இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மாணவி அபிநயா கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடமும், மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ்ராஜ் ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா்.

இதன் மூலம் இம்மாணவியா் பிப். 14இ ல் திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

கல்வி மாவட்ட அளவிலான மதுவிலக்கு விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை தாளாளா் மோகனகிருஷ்ணன், முதல்வா் காந்திமதி , பாரத் பள்ளி இயக்குநா் ராதாபிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT