தென்காசி

சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடா் மீட்பு பயிற்சி

DIN

சுரண்டை: சுரண்டை பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் கால மீட்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செஞ்சிலுவை சங்க சோ்மன் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் தீ விபத்து, வெள்ளம், விபத்து, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனா் (படம்).

மேலும், பேரிடா் காலங்களில் பேரிடா் மீட்பு குழு, தீயணைப்பு துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறை மற்றும் மருத்துவத் துறையினா்களிடமிருந்து தேவையான சேவைகள் பெறுவது குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT