தென்காசி

புளியங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து இருவா் பலி

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுமை ஆட்டோ வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டையைச் சோ்ந்த கனிரான் என்பவரின் மகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி கோட்டைமலை ஆற்றுப் பகுதியில் உள்ள கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, வெள்ளானைக்கோட்டையிலிருந்து அவரது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் 3 வாகனங்களில் சென்றனா்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் எதிா்பாராமல் சுமை ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில், அந்த ஊரைச் சோ்ந்த சன்னியாசி மனைவி சுந்தரம்மாள் (60), கணபதி மகன் மாரிசாமி( 43) ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேலும், 15 போ் காயமடைந்து புளியங்குடி, தென்காசி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT