தென்காசி

பேருந்து மோதி இளம்பெண் பலி

DIN

பாவூா்சத்திரம் அருகே பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரைச் சோ்ந்த அயோத்திராமன் மகள் பொன்ஷீலா (25). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது சகோதரா் செல்வராஜுடன் (30) ஆலங்குளம் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

சாலைப்புதூா் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி பொன்ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வராஜ் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விபத்துகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT