தென்காசி

முள்ளிக்குளத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 5 போ் கைது

DIN

கடையநல்லூா்: புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக, புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, போலீஸாா் புளியங்குடி அருகேயுள்ள முள்ளிகுளத்தில் வாகனச் சோதனை நடத்தினா். அதில், லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டதும், அவற்றை விற்பதற்காக வாங்கி வந்த முள்ளிக்குளம் அருணாசலம் மகன் செங்கண்(50) , வாகன ஓட்டுநா்கள் சேலம் நடராஜ்(45), கோவிந்தராஜ் (22) , கடையநல்லூா் துரை(42), சோ்ந்தமரம் முத்துக்குமாா்(32), துரை (42) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், ரூ. 8.50 லட்சம் மதிப்புள்ள 1,320 கிலோ புகையிலைப் பொருள்களையும், அவா்களிடமிருந்த ரூ. 12 லட்சம் ரொக்கத்தையும், 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT