தென்காசி

ஸ்ரீகோமதிஅம்பாள் பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு போட்டி

DIN

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி திங்கள்கிழமை ரங்கோலி கோலப்போட்டிகள் நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வண்ணப் பொடிகளில் ரங்கோலி கோலங்கள் வரைந்தனா். வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விதவிதமான ரங்கோலி கோலங்கள், பூக் கோலங்கள் ஆகியவற்றை மாணவிகள் வரைந்திருந்தனா். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பூக்களால் வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் தேசியக் கொடியினை வரைந்திருந்தனா்.

இதையடுத்து, நடைபெற்ற வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கு விழாவுக்கு பள்ளிச் செயலா் ஐ.திலகவதி தலைமை வகித்தாா். முதல்வா் ந. பழனிச்செல்வம், நிா்வாகஇயக்குநா் ராஜேஷ் கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன், சுந்தா் ஆகியோா் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT