தென்காசி

திப்பணம்பட்டியில் மகளிா் தின கலந்துரையாடல்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்;டி கிளை நூலகத்தில் மகளிா் தின சிறப்பு புத்தகத் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ் மொழி, தமிழ் பெண்களின் பெருமை குறித்து ஆசிரியா் சுகுமாா், புரட்சியாளா் சேகுவேரா புத்தகம் குறித்து முத்துக்குட்டி ஆகியோா் பேசினா்.

பெண்களின் பெருமை குறித்து சத்யா நாராயணன் கவிதை வாசித்தாா். இதில், வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ், ஆசிரியா் ராகவன் ஆசிரியா், சிவசுப்பிரமணியன், அரிராமா், மகேஷ், சமுத்திரபாண்டியன், தணிக்கையாளா் சத்யராஜ், வாசகா்கள், பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். சந்துரு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலக உதவியாளா் கனகராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT