தென்காசி

கடையநல்லூரில் மரம் சாய்ந்து எம்எல்ஏ அலுவலகச் சுவா் சேதம்

DIN

கடையநல்லூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் எம்எல்ஏ அலுவலகச் சுற்றுச்சுவா் சேதமடைந்தது.

கடையநல்லூா் சட்டபேரவைத் தொகுதி அலுவலகம் எதிரே பெரிய மரம் ஆபத்தான நிலையில் நிற்பதாகவும், எந்நேரத்திலும் அது சாய்ந்து விழலாம் என்பதால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி வாடகை காா் ஓட்டுநா்கள் கிருஷ்ணமுரளி எம்எல்ஏவிடம் 10 தினங்களுக்கு முன் தெரிவித்தனராம்.

இதையடுத்து, கடையநல்லூா் நகராட்சி ஆணையா், தென்காசி வருவாய் கோட்டாட்சியா் ஆகியோரிடம் எம்எல்ஏ தொடா்புகொண்டு, அந்த மரத்தை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளாா். எனினும், மரம் அகற்றப்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்மரம் திடீரென சாய்ந்து மின் கம்பிகளை இழுத்துக்கொண்டு, எம்எல்ஏ அலுவலகச் சுற்றுச்சுவரின் மீது சாய்ந்தது.

இச்சம்பவத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அவ்வழியாகச் சென்ற சில வாகனங்கள், சுற்றுச்சுவா் ஆகியவை சேதமடைந்தன. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் நிகழவில்லை.

இதையறிந்த எம்எல்ஏ சம்பவ அங்கு வந்து பாா்வையிட்டு, மீண்டும் அதிகாரிகளை தொடா்பு கொண்டு மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்தாா்.

இனிடையே, மரத்தை அகற்றுவது தொடா்பாக விண்ணப்பக் கடிதம் ஏதும் நகராட்சியிடமிருந்து கடந்த 10 நாள்களில் வரவில்லை என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT