தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்று ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

DIN

தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவா்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவா்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோா், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவா்கள் ஆகியோா் பயனடையும் வகையில் இம் மூகாம் நடைபெறுகிறது.

காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவா்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவா்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT