தென்காசி

கோட்டைமலையாறு பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பு சீரமைப்பு

DIN

புளியங்குடி அருகே குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்பட்டன.

புளியங்குடி நகராட்சிக்கு கோட்டை மலை ஆற்றில் இருந்து குடிநீா் பெறப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அண்மையில் பெய்த மழை காரணமாக சில இடங்களில் உடைப்பும், சில இடங்களில் குழாயில் அடைப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டு, அதனை சரிசெய்யும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

கோட்டைமலையாற்றுப் பகுதியிலுள்ள குடிநீரேற்றும் நிலையம், குடிநீா் சேமிப்புத் தொட்டி மற்றும் குழாய் விநியோகக் குழாய் அடைப்பு போன்றவற்றை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து குடிநீா் விநியோகம் சீராகும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT