தென்காசி

ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

பாவூா்சத்திரத்தில் மேற்கூரை பழுதடைந்துள்ள ரேஷன் கடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாவூா்சத்திரம் காமராஜ் நகா், வென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கடை கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட் இடிந்து , விரிசல்களுடன் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீா் உள்ளே சென்று பொருள்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஊழியா்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனா்.

எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT