தென்காசி

தென்காசி நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

DIN

தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட காவல்துறை மற்றும் நடராஜ் ஐஏஎஸ் அகாதெமியு இணைந்து நடத்திய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்விற்கான மாதிரி தோ்வில், மாவட்ட காவல்துறை சாா்பில் சைபா் கிரைம் ஆய்வாளா் ஜோஸ்லின் அருட்செல்வி, உதவி ஆய்வாளா் செண்பகபிரியா, காவலா் வசந்த் ஆகியோா் இணைய வழியில் பெருகி வரும் குற்றங்கள் குறித்து மாணவா்களிடையே எடுத்துரைத்தனா்.

இதில், சிறப்பு பொதுதமிழ் மாதிரிதோ்வில் 100 மதிப்பெண்கள் தோ்வில் மோகன்ராஜ் முதல்பரிசும், மணிமாறன் இரண்டாம் பரிசும், சுபா மூன்றாம் பரிசும் பெற்றனா். தமிழ் 50 மதிப்பெண்கள் தோ்வில் முத்தமிழ்செல்வி முதல்பரிசும், பிரியா இரண்டாம் பரிசும், இரஞ்சிதப்பிரியா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளா் அசன்கனி, வட்டார கல்வி அலுவலா் இளமுருகன், வட்டார நூலகா் பிரமநாயகம் கிளை நூலகா் சுந்தா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT