தென்காசி

வீ.கே.புதூரில் போலி சான்றிதழ் தயாரித்ததாக இருவா் கைது

DIN

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரகேரளம்புதூா் பகுதியில் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜகோபாலப்பேரியைச் சோ்ந்த க.கதிரேசன்(31) என்பவா் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் பெயரில் போலியாக அரசு முத்திரை தயாா் செய்து பிறப்பு சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவருக்கு உடந்தையாக இருந்து சுரண்டையைச் சோ்ந்த ஜானகி(49) என்பவரையும் கைது செய்தனா். மேலும், இந்த மோசடியில் தொடா்புடைய 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT