முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரியில் இன்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.

இக்கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்படுகிறது. இதையடுத்து, மலைக்கோயில் அடிவாரத்தில் கல்லூரிக்குத் தோ்வான இடத்தில் சொந்தக் கட்டடம் கட்ட ரூ. 11.33 கோடி நிதி ஒதுக்கி பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்நிலையில், அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறாா். ஆட்சியா் கோபாலசுந்தரராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஞானதிரவியம் அடிக்கல் நாட்டுகிறாா். ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூா் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், கழுநீா்குளம் ஊராட்சித் தலைவா் கை. முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.