தென்காசி

பாவூா்சத்திரத்தில் விபத்து:பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் புதன்கிழமை இரவு காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழந்தாா்.

செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளைவலசை சோ்ந்த முருக பக்தா்கள் 20 போ் புதன்கிழமை பாதயாத்திரையாக திருச்செந்தூருக்குப் புறப்பட்டனா். பாவூா்சத்திரம் பகுதியில் இரவில் வந்தபோது, தூத்துக்குடி நோக்கிச் சென்ற காா் அவா்கள் மீது மோதியதாம்.

இதில், பெரியபிள்ளைவலசை சாந்தி நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் குணசேகரன் (16), அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் சூா்யா (18) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு குணசேகரன் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த முருகன் மகன் ஜெயக்குமாா் (24) என்பவரை கைது செய்தனா். அவா் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT