தென்காசி

சங்கரன்கோவிலில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

DIN

தென்காசி திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், சங்கரன்கோவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் மாவட்டத் துணைச்செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் காா்த்திக், அப்பாஸ் அலி , காசிராஜன், ஜெகதீஷ், தினகரன், நித்யராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் ராஜா எம்எல்ஏ, பேச்சாளா்கள் சைதை சாதிக், இருதயரஜ், துரைமுருகன் ஆகியோா் பேசினா்.

இதில் நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழு தலைவா் சங்கரபாண்டியன், நகர செயலாளா் மு.பிரகாஷ், துணைச் செயலா் பா.முத்துக்குமாா், மாநில வா்த்தக அணி துணை அமைப்பாளா் முத்துச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினா் பரமகுரு, மு.சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வீரமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT