தென்காசி

இலஞ்சியில் 4 உயா்கோபுர மின்விளக்குகள் தொடக்கிவைப்பு

DIN

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் 4 உயா்கோபுர மின்விளக்குகள் தொடக்கிவைக்கப்பட்டது.

தென்காசி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சத்தில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, பெருமாள் கோயில், டிரஸ்ஸில் உணவகம், திருவிலஞ்சிகுமாரா் கோயில் ஆகிய 4 இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், தனுஷ் எம். குமாா் எம்.பி. ஆகியோா் பங்கேற்று சேவையைத் தொடக்கிவைத்தனா்.

பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய் சண்முகநாதன், பேரூா் செயலா் முத்தையா, செயல் அலுவலா் அரசப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி,தென்காசி மேற்கு ஒன்றியச் செயலா் வல்லம்திவான்ஒலி, செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT