திருநெல்வேலி

குண்டர் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது

DIN

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் மகன் செல்வகுமார் (23), முப்பிடாதி மகன் ரமேஷ் (25). இவர்கள்  மீது பல்வேறு வழக்குகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் உள்ளன. இதனிடையே,  இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவதாகக் கூறி மாநகர காவல் துணை ஆணையர் கு.சுகுணசிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அளித்த பரிந்துரையை ஏற்று,  2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் (பொ) கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT