திருநெல்வேலி

பேட்டையில் வாஜ்பாய்க்கு பாஜகவினர் அஞ்சலி

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, பேட்டையில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி 46, 47 ஆவது வார்டு பாஜக சார்பில்,  பேட்டை காவல் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மண்டலத் தலைவர் ஆனந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் பொன் அழகுராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மண்டல பொதுச்செயலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வாஜ்பாயின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வாய்பாய் ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் முருகன், வெங்கட்ராகவன், கோபால், சீதாலட்சுமி, சங்கர், முத்துநாகேஷ்வரன், சிவசக்திலிங்கம், சிவசுப்பிரமணியன், மகேஷ், ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT