முகப்பு
திருநெல்வேலி

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு நவ.7இல் சிறப்புப் பேருந்து

சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு  புதன்கிழமை (நவ. 7) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 5 நவம்பர் 2018, 7:51 am IST
பகிர்:

சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு  புதன்கிழமை (நவ. 7) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுரண்டை பகுதியில் இருந்து சென்னை மற்றும் கோவையில் வசிக்கும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் வந்து திரும்பிட ஏதுவாக இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிகழாண்டு தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் பயணிகள் வசதிக்காக புதன்கிழமை (நவ.7) மாலை 5 மணிக்கு சென்னைக்கும், இரவு 7 மணிக்கு கோவைக்கும் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு சுரண்டை பேருந்து நிலைய நேரக் காப்பாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments