திருநெல்வேலி

தென்காசி அருகே யானைகளால் வாழை, தென்னை, நெற்பயிர்கள் சேதம்

DIN

தென்காசி அருகே மத்தளம்பாறை கென்டி ஊத்து சரகத்திற்குட்பட்ட விவசாய பகுதியில், யானைகள் புகுந்ததில் வாழை, தென்னை, நெற்பயிர்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, குற்றாலம் சரக வனத்துறை வனவர் பாண்டியராஜ், வனக் காவலர் வனராஜ், வேட்டை தடுப்புக் காவலர் மாடசாமி, ராஜ், சதாசிவம் ஆகியோர் கொண்ட குழு சேதமடைந்த பகுதியைப் பார்வையிட்டது. இதில், அருணாசலம் என்பவரின் 10 தென்னைமரங்கள், பொன்னையா என்பவரின் ஓர் ஏக்கர் வாழை, 5 தென்னை மரங்கள், இசக்கி என்பவரின் 20 தென்னைகள், வேலாயுதம் என்பவரின் ஓர் ஏக்கர் வாழை, சேதுராமன் என்பவரின் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குற்றாலம் வனவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT