சுத்தமல்லியில் மக்கள் போராட்டம்
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்; சுத்தமல்லியில் கழிவுநீர் ஓடைகளைச் சீரமைத்து சுகாதாரத்தைப் பேண வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுத்தமல்லி விலக்கு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மகா சபா நிர்வாகி ராஜபாண்டி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ், இசக்கி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.