ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு அரசு மருத்துவர்கள் சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டன.
போராட்டத்துக்கு ஜனநாயக அரசு மருத்துவர் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்; நோயாளிகளின் சேவைக்கு
ஏற்ப மருத்துவ பணியிடங்களை அரசாணையின் படி அமல்படுத்த வேண்டும்; அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்ச
கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன், மாவட்டத் தலைவர் எஸ்.டி.விஜயன், ஜனநாயக அரசு
மருத்துவர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர் முத்துக்குமார் உள்பட அனைத்து மருத்துவர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.