திருநெல்வேலி

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி

DIN

தமிழ் முழக்கப் பேரவையின் 76ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவசபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவனர் தலைவர் பி.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். தி.ராமன் வரவேற்றார். பேரவையின் அமைப்பாளர் சு.செல்லப்பா அறிமுகவுரையாற்றினார். கவிஞர் கண்ணதாசன் குறித்து கம்பன் இலக்கியச் சங்க இணைச் செயலர் ரா.முருகன் பேசினார். இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இளையோர் மேம்பாட்டு இயக்குநர் ச.வைரவராஜன் பேசினார். "பொய்யடிமை இல்லாதார்' என்ற தலைப்பில் மாணிக்கவாசகர் குறித்து கைவல்ய ஞானசபை தலைவர் மகாலிங்கம் ஐயப்பன் பேசினார்.  விழாவில், நிலா இலக்கிய வட்டத் தலைவர் வளன் அரசு, அமைப்பாளர் ராஜகோபால், அப்துல்கலாம் மன்றச் செயலர் முத்துகுமார், கம்பன் கழகத் தலைவர் கு.சடகோபன், செயலர் பொன்வேலுமயில், நெல்லை கம்பன் கழகத் தலைவர் சிவ சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் அருள்நிதி சு.சண்முகவேலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT