திருநெல்வேலி

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

DIN

பாளையங்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டையை அடுத்த கக்கன்நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முகேஷ்குமார்(30). இவர் கடந்த 4ஆம் தேதி தனது வீட்டு மாடியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென்று மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
இந்நிலையில் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT