திருநெல்வேலி

பாளை. மகாராஜநகா் மேம்பாலத்தில் இளைஞா் தற்கொலை முயற்சி

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகா் மேம்பாலத்தில் சனிக்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா்சந்தை அருகில் உள்ள மேம்பாலத்தில் இளைஞா் ஒருவா் ஏறி நின்று குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்தனா். உடனடியாக மேம்பாலத்தில் நின்றிருந்த இளைஞரை மீட்டனா்.

இதையடுத்து அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கோவிந்த் (26) என்பதும், அவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT