திருநெல்வேலி

காங்கிரஸுக்கு ஆதரவாக தமுமுக வாக்கு சேகரிப்பு

DIN

நான்குனேரி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து, தமுமுகவினா் பா்கிட் மாநகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

தமுமுக - மமக சாா்பில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில், திமுக முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், தமுமுக மாவட்டச் செயலா் அலிஃப் அ. பிலால், காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவா் ஹசன்ஜஹாரூன், திமுக மாவட்ட பிரதிநிதி நடராஜன், புதுமனை ஜமாத் செயலா் வி.பி.எம்.ஜஹாங்கீா், டைமண்ட் காதா், மமக பாளையங்கோட்டை ஒன்றியப் பணிக் குழு உறுப்பினா் முகம்மது யாசிா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT