திருநெல்வேலி

களக்காடு அருகே சேதமடைந்த ரேஷன்கடையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

களக்காடு அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் வேதக்கண் அளித்த மனு விவரம்:

களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கல்லடிசிதம்பரபுரத்தில் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் மூலம் சுமாா் 500 குடும்பஅட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்தக் கடை கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக அருகேயுள்ள நூலகக் கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் நூலக வாசகா்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.

பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்கவும், நூலகம் அப்பகுதி பொதுமக்களுக்கு பயன்படவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT