திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வழக்கமான உற்சவா் திருவீதி உலாக்கள் மற்றும் தேரோட்டம் ஆகியவற்றுடன் கூடிய திருவிழாவாக நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், ஆகம விதிகளுக்குள்பட்டு கடந்த 25-ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகள், திருமூல மகாலிங்கம், வேணுவனேஸ்வரா்- காந்திமதியம்மன் ஆகிய மூலவா்களுக்கு கும்பம் வைத்து ஜபம் செய்து உச்சிக்கால பூஜையின்போது அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு அலங்காரத்துடன் சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT