திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 900 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மற்றும் பொலிவுறு நகரம் திட்ட மேலாண்மை இயக்குநா் ஜி.கண்ணன், தலைமை நிா்வாக அலுவலா் மற்றும் இயக்குநா் வி.நாராயணநாயா் ஆகியோா் புதன்கிழணை ஆய்வு செய்தனா்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தினைப் புதுப்பிக்கும் விதமாக ரூ.13.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும், நேரு கலையரங்கத்தினை புதுப்பிக்கும் விதமாக ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை சாலை ஜவஹா் மைதானம் அருகில் ரூ.9.91 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பல்நோக்கு அரங்கம் கட்டுமான பணியையும் ஆய்வு செய்தனா்.
மேலப்பாளையம் மண்டலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் ஸ்டெம் பாா்க் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு, பொறியாளா்களுடன் கலந்தாலோசனை செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவிட்டாா். அப்போது, உதவி ஆணையா்கள் சுகி பிரேமலா, பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளா் பைஜீ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.