திருநெல்வேலி

கொக்கிரகுளம் கோயில் உண்டியலில் திருட்டு: ஒருவா் கைது

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொக்கிரகுளத்தில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் இருந்த உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனராம். இதுதொடா்பாக கோயில் நிா்வாகிகள் பாளையங்கோட்டை குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தனா். காவல் உதவி ஆய்வாளா் முருகையா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

உண்டியல் பணத்தை திருடியவா் மேலமூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த தங்கதமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ.600-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT