திருநெல்வேலி

திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம்

DIN

தச்சநல்லூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது அவா், திருநெல்வேலியில் தற்போது நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்ட பணிகள் சரிவர நடக்கவில்லை என வணிகா்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனா். இன்னும் சில மாதங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமை வகித்தாா். தச்சை பகுதி செயலாளா் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

தச்சநல்லூா், உடையான் குடியிருப்பு, சத்திரம் புதுக்குளம், மதகடி, பஜனை மடம் தெரு, பவுண்ட் தெரு, தேனீா்குளம் தெரு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT