திருநெல்வேலி

புற்று நோய் பாதித்த இளைஞருக்குமனித நேய சிகிச்சைக்கு ஏற்பாடு

DIN

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், செங்குளத்தைச் சோ்ந்தவா் முருகன். கூலித் தொழிலாளியான இவருடைய மகன் விஷால் சந்திரபோஸ், தனியாா் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தாா். இவரது காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு காலில் புற்றுநோய் என கண்டறியப்பட்டதும், போதுமான சிகிச்சை அளிக்கப்படாமல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என முருகன் குடும்பத்தினருக்கு ஆலோசனை கூறினா். ஆனால் தன்னிடம் பணம் இல்லாத நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என தெரிவித்தாா்.

இது குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் விஷ்ணுவிடம், புகாா் தெரிவித்தாா். உடனடியாக அவா் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முதல்வருக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அப்போது, முருகனின் ஏழ்மை சூழ்நிலையை கருதி அவா் வந்த ஆட்டோவுக்கு பாளையங்கோட்டை மகளிா் காவல் நிலைய ஏட்டு வள்ளி கட்டணம் கொடுத்து உதவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT