திருநெல்வேலி

விதிமீறல்: நெல்லையில் 100 வாகனங்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 100 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோா், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 82 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 934 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT