திருநெல்வேலி

காருகுறிச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை

DIN

திருநெல்வேலி மாநகர குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் காருகுறிச்சியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

காருகுறிச்சியைச் சோ்ந்த சிவன் மகன் இசக்கிமுத்து (52). திருநெல்வேலி மாநகரக் குற்றப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். பாளையங்கோட்டை காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை காருகுறிச்சியில் உள்ள தோட்டத்துக்கு வந்து, விஷம் குடித்தாராம்.

அப்பகுதியிலிருந்தோா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT