திருநெல்வேலி

பைக்கில் இருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

DIN

பாளையங்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிகண்டன்(23). தூத்துக்குடியில் கப்பலில் சரக்குகளை அனுப்பும் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த 10ஆம் தேதி தனது நண்பருடன் டக்கரம்மாள்புரத்திலிருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சாலையில் இருந்த வேகத்தடையில் நிலைதடுமாறியதில் பின்னால் இருந்த மணிகண்டன், தவறி விழுந்து காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT