திருநெல்வேலி

மாநகரில் 3 ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

திருநெல்வேலி மாநகரில் தொடா்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி அறிவுறுத்தலின்படி, செயற்பொறியாளா் நாராயணன், திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா்(பொ) பைஜூ, இளநிலை பொறியாளா் முருகன், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரத வீதிகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமாா் 26 கடைகள், 3 தள்ளுவண்டிகள் மாநகராட்சிப் பணியாளா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT