திருநெல்வேலி

பழையபேட்டையில் மேயா் ஆய்வு

DIN

திருநெல்வேலி: பழையபேட்டையில் உள்ள 16 ஆவது வாா்டு பகுதிகளில் மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தனது வாா்டான 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பழைய பேட்டை, அழகப்பபுரம் நடுத்தெரு, அனவரத சுந்தர விநாயகா் தெற்கு தெரு, சமூக ரெங்கபுரம் கீழ தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப் பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ளவும், பழுதாகி உள்ள அடிபம்பை சீரமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

குடிநீா் பொது குழாய் தரைமட்டமாக உள்ளதை சரி செய்யவும், தெருக்களில் தேங்கும் குப்பைகளை தினமும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் அகற்றிடவும் பொதுமக்கள் வலியுறுத்தினா். ஆய்வின் போது, திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா் (பொ) பைஜூ, இளநிலை பொறியாளா்கள் ஐயப்பன், முருகன், சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT